பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியை சேர்ந்தவர். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். தனது பேச்சு திறன் மற்றும் டைமிங் காமெடி சென்சால் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் எளிய வாழ்க்கையை விரும்புகிறவராக இருக்கிறார். எளிய உடைகள் அணிவது, எல்லோரிடமும் எளிமையாக பழகுவது அவரது வழக்கமாக உள்ளது. "சினிமா நட்சத்திரத்தின் மகள் என்ற கிரீடம் இல்லாமல் என் மகள் மற்ற குழந்தைகளை போலவே இந்த உலகத்தை புரிந்து வளர வேண்டும்" என்று சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் டவுன் பஸ்சில் தனது மகளுடன் பயணம் செய்திருக்கிறார். அந்த பயணத்தில் அவர் மகளுக்கு சென்னையை சுற்றிக் காட்டியதோடு, அந்த பகுதியில் என்ன மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவரது பஸ் பயணத்தை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது இப்போது வைரலாக பரவி வருகிறது.