பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் தியேட்டர்களை முழுவதுமாக மூட உள்ளார்கள். இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்பதால் இன்றிலிருந்தே தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அரசு அறிவித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை நீடிக்குமா அல்லது அதற்கு மேலும் தொடருமா என்பது கொரானோ பரவலைப் பொறுத்தே அமையும்.
கடந்த வருடம் கொரோனா பரவிய போது தியேட்டர்களை மூடிய காரணத்தால், ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்து பல படங்களை வெளியிட்டார்கள். அது போல இந்த வருடமும் நடக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே எழுந்துவிட்டது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே 'நெற்றிக்கண்' படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
மே மாதத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வந்தால் மேலும் பல புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.