புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் தியேட்டர்களை முழுவதுமாக மூட உள்ளார்கள். இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்பதால் இன்றிலிருந்தே தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அரசு அறிவித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை நீடிக்குமா அல்லது அதற்கு மேலும் தொடருமா என்பது கொரானோ பரவலைப் பொறுத்தே அமையும்.
கடந்த வருடம் கொரோனா பரவிய போது தியேட்டர்களை மூடிய காரணத்தால், ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்து பல படங்களை வெளியிட்டார்கள். அது போல இந்த வருடமும் நடக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே எழுந்துவிட்டது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே 'நெற்றிக்கண்' படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
மே மாதத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வந்தால் மேலும் பல புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.