பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூரலிகான். ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் நடிகர் மன்சூரலிகான். சமீபத்தில் நடிகர் விவேக் இறந்தபோது அவரது இறப்புக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று சொல்லி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதையடுத்து அவர் கைதாகும் நிலை ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் பெற்றார். மேலும் ரூ. 2 லட்சம் அபராதமும் செலுத்தினார்.
இந்நிலையில் இன்று(மே 10) நடிகர் மன்சூரலிகான் கிட்னியில் கல் அடைப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைக்கான பணிகள் துவங்கி உள்ளன. இன்று அல்லது நாளைக்குள் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.