காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? |
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் திரையுலகினர் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த வகையில், ராட்சசன், அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமியும் கடந்த மே 3-ந்தேதி அன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தவர். அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது டுவிட்டரில் கொரோனா தொற்றில் இருந்து தான் பூரண குணமடைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியட்டுள்ளார் அம்மு அபிராமி. நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் அருளாலும், அனைவரது பிரார்த்தனையாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு முடிந்தவரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மு அபிராமி.