இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
சித்து பிளஸ் 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவன், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
கொரோனா 2வது அலை காலத்தில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருவதாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசன் விதிமுறைகளை மீறி நடக்கும் படப்பிடிப்புகளை தடை செய்யுங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் விதிமுறைகளை மீறி (அன்அபீசியல்) எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர் முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.