தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹன்சிகா நடித்து முடித்துள்ள அவரது 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் கடந்த 2 ஆண்டுகளாக வெளிவரவில்லை. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஜலீல் படத்துக்கு தடைகேட்டு நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தை இயக்கியதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தை தராமல் ஏமாற்றி விட்டனர். எனக்கு தெரியாமல் பல காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளனர். அதனால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் படத்தின் பணிகள் முடிந்து விட்டாக இயக்குனர் ஜலீல் கூறும் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
படத்தின் இயக்குனர் தெடர்ந்த வழக்கில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்கவில்லை. நோட்டீஸ் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டது, இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.