பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மோசகமாத்தான் உள்ளது. அங்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
சீனியர் நடிகரான சிரஞ்சீவி அவரது சொந்த செலவில் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். முதல் கட்டமாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சன்ட்ரேட்டர்கள் ஆகியவற்றை அனந்தப்பூர், குண்டூர் மாவட்டங்களுக்கு அளித்திருக்கிறார். அடுத்து கம்மம், கரீம்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை வழங்க உள்ளார். சரியான நேரத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் சேவைக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மட்டும் சில நடிகர்கள் லட்சங்களை வழங்கினார்கள். அதற்கும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் எதையும் வழங்கவில்லை. மற்றபடி வேறு எந்த நிவாரண உதவிகளையும் எந்த சீனியர் நடிகர்களும் செய்யாமல் இருப்பது அவர்களது ரசிகர்களிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.