நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மோசகமாத்தான் உள்ளது. அங்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
சீனியர் நடிகரான சிரஞ்சீவி அவரது சொந்த செலவில் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். முதல் கட்டமாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சன்ட்ரேட்டர்கள் ஆகியவற்றை அனந்தப்பூர், குண்டூர் மாவட்டங்களுக்கு அளித்திருக்கிறார். அடுத்து கம்மம், கரீம்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை வழங்க உள்ளார். சரியான நேரத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் சேவைக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மட்டும் சில நடிகர்கள் லட்சங்களை வழங்கினார்கள். அதற்கும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் எதையும் வழங்கவில்லை. மற்றபடி வேறு எந்த நிவாரண உதவிகளையும் எந்த சீனியர் நடிகர்களும் செய்யாமல் இருப்பது அவர்களது ரசிகர்களிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.