பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நடிகர் சிம்பு டுவிட்டரில் ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக இருந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகினார்.
மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் தளத்தில் இணைந்தார். அதில் அவரை 2 லட்சத்திற்கும் கூடுதலானோர் பாலோ செய்து வருகிறார்கள். அதே காலகட்டத்தில் தான் இன்ஸ்டாகிராம் தளத்திலும் புதிய கணக்கை ஆரம்பித்தார். ஆனால், அங்கு அவரைத் தொடர்பவர்கள் டுவிட்டரை விட அதிகமாக இருக்கின்றனர். தற்போது இன்ஸ்டாவில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டிவிட்டது.
“முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்,” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு. சமீபத்தில் தான் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படப் பாடலான 'மாங்கல்யம்' பாடல் அவருக்கு முதலாவது 100 மில்லியன் என்ற சாதனையைக் கொடுத்துள்ளது.
யு டியூபில் 100 மில்லியனையும், இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனையும் அடுத்தடுத்து பிடித்துள்ளார் சிம்பு.