விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் |

ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உருவாக்கும் படங்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றன. பாகுபலி இரண்டு பாகங்களை பார்த்து வியந்த ரசிகர்களை, அடுத்தததாக ஆர்ஆர்ஆர் என்கிற படம் மூலம் புதிய உலகிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள ராஜமவுலி அதில் 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
இன்னும் எடுக்கப்பட வேண்டியவற்றில் இரண்டு பாடல் காட்சிகள் மீதம் இருக்கின்றனவாம். அதில் ஜூனியர் என்திஆர், ராம்சரண் இருவரும் பங்கேற்கும் மிக பிரமாண்டமான பாடல் காட்சியும் ஒன்று.. சுதந்திர போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப்பாடல், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.