பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் வில்லன் நடிகரான சோனு சூட், ரியல் ஹீரோவாக மாறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, அவசிய தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார் சோனு சூட். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்காகவே கர்னூல் பகுதியில் தனியாக உற்பத்தி கூடமே ஆரம்பித்துள்ளார் சோனு சூட்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் இறக்கும் மக்களை உடனுக்குடன் தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ முடியாமல் கால தாமதம் ஏற்படும் சூழல் பல கிராமங்களில் நிலவுகிறது. இதனை குறிப்பிட்டு சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்கு இறந்த உடல்களை அவர்களுக்கான இறுதிச்சடங்கு நடக்கும் வரை பத்திரப்படுத்தி வைக்கும் விதமாக ப்ரீசர் பாக்ஸ் எனப்படும் குளிரூட்டும் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட்.