பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா |

தமிழ் சினிமாவில் பெண் ஒளிப்பதிவாளர்கள் மிகவும் குறைவு. பி.ஆர்.விஜயலட்சுமிக்கு பிறகு வேகமாக வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன். அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து முடித்து பி.சி.ஸ்ரீராமிடம் 5 ஆண்டுகள் வரை உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு நாக் நாக் ஐ ஏம் லுக்கிங் டு மேரி என்ற ஆங்கில படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார்.
இந்தியில் தடுகா, கன்னடத்தில் படவா ராஸ்கல், தமிழில் மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படங்களில் பணியாற்றிவர் இப்போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு ஒளிப்பதிவாளர் சினிமாவுக்கானவர் மட்டுமல்ல ஆவணப்படம், குறும்படம், வெப் சீரிஸ், விளம்பர படம், மியூசிக் வீடியோ என நிறைய இருக்கிறது. நல்ல ஒளிப்பதிவாளருக்கு இப்போதும் தேவை இருக்கிறது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களை ஒப்பிடும்போது தொழில்நுட்ப துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெண்கள் சினிமா தொழில்நுட்பத்தை நல்ல முறையில் கற்று அந்த பணிக்கு வந்தால் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் ஆண் பெண் பேதமெல்லாம் மிகவும் குறைந்து விட்டது. என்றார்.