பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சிவசக்தி மூவி மேக்கர்ஸ் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில், அகத்தியன் இயக்கத்தில், தேவா இசையமைப்பில், அஜித், தேவயானி மற்றும் பலர் நடித்து ஜுலை 12, 1996ம் ஆண்டு வெளிவந்த படம் 'காதல் கோட்டை'.
தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஒரு ஹீரோவாக மிகப் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த படம் இது. அப்படம் வெளிவந்து 25 ஆண்டு முடியப் போகிறது. அதைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இன்று 'காதல் கோட்டை' படக்குழுவினருக்காக சிறப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் அஜித் கலந்து கொள்வாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்த சந்திப்பு பற்றி 'காதல் கோட்டை' படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் அவரது முகப்புத்தகத்தில் , "காதல் கோட்டை" திரைப்படம் வெளியாகி நாளையுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எட்டாவது படம். படத்தை உருவாக்க எங்கள் குழு பணியாற்றிய நாட்களை பின்னோக்கி அசை போடுகின்றேன். நாளை காலை பதினோரு மணி அளவில் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்கள் சந்திப்பை நான் வணங்கும் நண்பர், தயாரிப்பாளர் திரு. சிவசக்தி பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். மீண்டும் பழைய நண்பர்களுடன் பழைய நாட்களுக்குச்சென்று உரையாடி கலந்து மகிழும் அந்நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
'காதல் கோட்டை' படத்திற்குப் பிறகு அப்படத்தின் தயாரிப்பாளரின் தயாரிப்பிலோ, இயக்குனர் அகத்தியன் இயக்கத்திலோ அஜித் மீண்டும் நடிக்கவேயில்லை.