ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழக திரையரங்குகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டிலேயே தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாசகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளுக்கு ரூ.15 மற்றும் 7 என்றும், பேரூராட்சி கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.5 மற்றும் 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இளவரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற இந்த கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானதாகி விடும். அதோடு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.