திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழக திரையரங்குகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டிலேயே தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாசகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளுக்கு ரூ.15 மற்றும் 7 என்றும், பேரூராட்சி கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.5 மற்றும் 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இளவரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற இந்த கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானதாகி விடும். அதோடு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.