பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மறைந்த இசைமேதைகளின் மதிப்பும், மகத்துவமும் நமக்கு தெரியவில்லை என, இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். அவர் அளித்த பேட்டி: ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால், பாடல் என்பது எப்போதும் மலராக, இளமையாக இருக்கும்.
அந்த பாடல் தான், மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால், என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும். என் இசைப்பணி எப்போதும் போல, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில், பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து, பராமரிக்கின்றனர். இங்கு நம் இசைமேதைகளின் இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா; தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே...
இதுகுறித்து, மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, விழா ஒன்றில் பேசியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். நமக்கு அதன் மதிப்பு, மகத்துவம் தெரியவில்லை. பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்றதொரு விஷயத்தை செய்ய வேண்டும். என் இசையில் நான் பாடவேண்டும். வரும் தலைமுறை பின்பற்றும்படி, நான் நடந்து வருகிறேன். இசை மேதைகளுக்கு இங்கு சிலை வைக்கவில்லை என்பதை பார்க்கும் போது, நம் உணர்வு அப்படி இருக்கிறது அவ்வளவுதான். ரீமிக்ஸ் பாடல்களை எதிர்ப்பது என் வேலையல்ல. கேமராவில் என் முகத்தை காட்டக்கூடாது என, நினைக்கிறேன். என் இசையில் என்னை பார்க்கலாம்.
பேரக்குழந்தைகளுக்கு நான் எங்கே கற்றுத்தருகிறேன். குழந்தைகளிடமிருந்து தானே நாம் கற்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தானே நமக்கு எல்லாம் சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு இசையறிவும், ஆர்வமும் இருப்பது ஆச்சர்யம் இல்லை. எல்லாம் ரத்த உறவுகள்தானே. அப்படித்தான் இருக்கும். வாய்ப்பு வரும் போது அவர்களை எனது இசையில் பாட வைப்பேன்.
1000 படங்களை கடந்தாலும் இன்னும் புதுமையான விஷயம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இசையமைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வருகிறார்கள். கொரோனா காரணமாக சினிமாவே டல்லாகத் தான் இருக்கிறது. விரைவில் நிலைமை மாறும்.