50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரிய்த்விகா, அஞ்சு குரியன், ரியா, நாசர், இளவரசு, பானுப்ரியா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: இரண்டு நாளில் நடக்கும் ஹைப்பர்லிங்க் கதை. ஒரே சம்பவத்தில் சம்பந்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் தனித்தனி கதை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திப்பவர்களாக இருப்பார்கள். இதனால் பார்வையாளர்கள் படத்தோடு தங்களை பொருத்திக் கொள்வார்கள். அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் புதுமுக இயக்குனரின் படம் என்று பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்கள்.
விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இப்படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். கே.டி (எ) கருப்புதுரை படத்தில் பணியாற்றிய மெயேந்திரன் கெம்புராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். படப்பிடிப்பை ஜனவரி மாதமே தொடங்கி விட்டோம். கொரோன 2வது அலையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளோம். என்றார்.