மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா | ‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' | அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த 'கூலி' | அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! |
தமிழ், தெலுங்கு மொழிகளில் நான்கு வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கடந்த வருடம் கொரோனா அலையின் காரணமாக வழக்கமான மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது சீசன் தெலுங்கில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். செப்டம்பர் முதல் வாரத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கப் போகிறார்.
தமிழில் கமல்ஹாசன் இந்த வருட 5வது சீசனைத் தொகுத்து வழங்க தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியதா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் நிகழ்ச்சிக்கான அரங்கம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் அங்கு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அனுமதியில்லாமல் நடத்தப்பட்டது தெரிந்ததும் அந்த ஸ்டுடியோவுக்கு அரசு தரப்பில் 'சீல்' வைத்தார்கள். மலையாள பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
அந்த 'சீல்' விவகாரத்தை முடித்த பிறகுதான் தமிழில் 5வது சீசன் பற்றி தகவல் வெளிவரும் என்கிறார்கள்.