தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இயக்குனர் ஷங்கருடனான பிரச்னைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஹீரோவாக நடிக்க சில பட வாய்ப்பு வந்தாலும், அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கொரோனா காலக்கட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டு, அதில் 10 கதைகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதில், சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படம் மட்டும் முதலில் துவங்க இருப்பதாக தெரிகிறது. ஆடி மாதம் முடிவடைந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, நிறைய கதைகளில் என்னிடம் கேட்டார்கள். அதில் 10 கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறேன். வரிசையாக தொடர் அறிவிப்புகள் வரும். ரசிகர்கள் இனி தொடர்ந்து என்னை திரையில் பார்க்கலாம், என்றார்.