முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. சமீபகாலமாக சமூக சார்ந்த பல விஷயங்களையும் செய்து வருவதோடு, அதுதொடர்பான விஷயங்களுக்கும் குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார் மயில்சாமி.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் வரியை குறைத்ததை வரவேற்கிறேன்' என்றார் மயில்சாமி.