பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

குறும்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் தினேஷ் பழனிவேல் கதிர் என்ற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது, 25 வயதுக்குள் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் ஒரு இளைஞன், வாழ்க்கையை உற்சாகமாக வைத்திருக்கும் 65 வயது மூதாட்டியிடம் ஞானம் பெறுவது தான் இந்தப் படத்தின் கதைக் களம். கதிரின் கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் சாவித்திரிப் பாட்டியின் 'பிளாஷ் -பேக்' கதையும் பார்வையாளர்களுக்கு இரண்டு மாறுபட்ட உணர்வுகளைக் கொடுக்கும்.
கதாநாயகனாக வெங்கடேஷ் அறிமுகமாகிறார். சாவித்திரி பாட்டியாக 'ஒரு முத்தசி கதா' மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்றிருக்கும் ரஜினி சாண்டி நடிக்கிறார். அவரைத் தமிழுக்குக் கொண்டு வருவது எங்களுக்குக் கிடைத்த கௌரவம். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், பவ்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'அங்கமாலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உட்பட 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்துவிட்ட முன்னணி இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். முதியவர்களின் அனுபவம் இளைய தலைமுறைக்கான வரம் என்பதை படம் விளக்கும்.