பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 2019ல் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்ட்ரா ஜாவி என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் ரோசி எனும் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தவர் அலெக்ஸாண்ட்ரா.
ரஷ்ய நாட்டு மாடல் நடிகையான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு கோவாவிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வந்தார். தனது காதலருடன் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலைக் கொண்டுள்ளார். அலெக்ஸாண்ட்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.