தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2019ல் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்ட்ரா ஜாவி என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் ரோசி எனும் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தவர் அலெக்ஸாண்ட்ரா.
ரஷ்ய நாட்டு மாடல் நடிகையான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு கோவாவிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வந்தார். தனது காதலருடன் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலைக் கொண்டுள்ளார். அலெக்ஸாண்ட்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.