திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்பட அனைத்து முன்வரிசை ஹீரோக்களுடனும் காமெடியனாக நடித்து விட்டவர் சூரி. தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இதனால் அடுத்து சந்தானம் பாணியில் சூரியும் முழுநேர ஹீரோவாகி விடுவாரோ என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் அனைவருமே சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, அவரோ தனது தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார். அதையடுத்து அண்ணனும், தம்பியும் ஒரேநாளில் பிறந்தார்களா? என்ற ஆச்சர்ய கேள்விகள் எழுந்தபோது, நானும் எனது தம்பி லட்சுமணனும் இரட்டை பிறவிகள் என்பதை சோசியல் மீடியாவில் தெரிவித்தார் சூரி.
அதையடுத்து டுவிட்டரில், சூரியை வாழ்த்திய சிவகார்த்திகேயன், அண்ணன் ஹீரோவாகி விட்டார். இனிமேல் நம்ம சங்கத்துக்கு வேற ஆளதான் பார்க்கனும் போல என்று கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சூரி, அப்படியெல்லாம் விட்ற முடியாதுங்க தலைவரே, சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும். சங்கம்னா செயலாளர் இருக்கனும். ரொம்ப நன்றிங்க தம்பி, லவ் யூ தம்பி என்று சிவகார்த்திகேயனுக்கு பதில் கொடுத்துள்ளார் சூரி.