பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2017ம் ஆண்டு நடைபெற்ற போதைப் பொருள் விவகார வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கால்வின் என்பவரிடம் நடைபெற்ற விசாரணயை அடுத்து 12 தெலுங்கு சினிமா பிரபலங்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கை போதைப் பொருள் விவகாரத்துடன், பணமோசடி வழக்காகவும் விசாரித்து வருகிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சார்மி, நடிகர் நந்து ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதை அவர்கள் விசாரணையின் போது தாக்கல் செய்தனர்.
விசாரணையின் அடுத்த பகுதியாக 'பாகுபலி' நடிகர் ராணா டகுட்டி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ராணாவுக்கு அடுத்து தெலுங்கு ஹீரோவான ரவி தேஜா ஆஜராக உள்ளார்.
கால்வினின் மொபைல் போனில் உள்ள சினிமா பிரபலங்களின் எண்கள், அவரது கணக்கிற்கு வந்த பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
பாலிவுட், டோலிவுட், சான்டல்வுட் ஆகிய இடங்களில் போதைப் பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக கோலிவுட்டில் இப்படி யாரும் இந்த சர்ச்சையில் சிக்கவில்லை.