பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜன்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஞான ராஜசேகரன் ‛ஐந்து உணர்வுகள்' என்ற ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. மறைந்த பெண் எழுத்தாளரான சூடாமணி எழுதியுள்ள சிறுகதைகளைத் தேர்வு செய்து அவற்றை தனது ஆந்தாலஜி படத்தின் கதையாக வைத்துள்ளார்.
“மனித மனங்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் 40 வருடங்களுக்கு முன்பே அவர் எழுதியுள்ளார். பெண்களை மையமாக வைத்து ஆண், பெண் உறவு பற்றி அவர் எழுதியுள்ள ஐந்து சிறுகதைகளைத் தேர்வு செய்துள்ளேன். அந்தக் கதைகள் இந்தக் காலத்திற்கும் பொருத்தமான கதைகளாக இருக்கின்றன.
கொரோனா முதல் அலைக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்து முடித்தேன். அப்போது இந்தப் படத்தில் நடிக்கத் தயாராக இருந்தவர்களைத்தான் படத்தில் நடிக்க வைத்துள்ளேன். அவர்கள் மிகவும் பிரபலமானவர்களாக இல்லை என்றாலும் சின்னத் திரையில் பிரபலமானவர்கள்.
இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதுவரை கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளவர் முதல் முறையாக சீரியசான ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளார். அவருடைய மற்றொரு பக்கம் இந்தப் படத்தில் வெளிப்படும்.
இந்தப் படத்தில் சுஜிதா, ஷ்ரேயா அன்சன், ஸ்ரீரஞ்சனி, ஷைலஜா செட்லூர், சிட்டிசன் சிவக்குமார், மணிபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்,” என்கிறார் ஞான ராஜசேகரன். மேலும், “சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி படங்கள் பலம் வாய்ந்தவையாக இல்லை. சினிமாவில் எப்படி கதையை வைப்பார்களோ அது போலவே வைத்திருந்தார்கள். ஆனால், எனது ஆந்தாலஜி படத்தில் நான் தேர்வு செய்த கதைகளே பலம் வாய்ந்தவை,” என்கிறார்.
இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடும் ஆசையில் இருக்கிறார் ஞான ராஜசேகரன்.