பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

காதலித்து, திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர்களின் பிரிவுக்கு பல வகையான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நேரடியாக இதுவரை பதில் கொடுக்காமல் இருந்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் நேற்று தனது திருமணநாளில் சோகமான பதிவை பதிவிட்ட சமந்தா இன்று இன்ஸ்டாவின் ஸ்டோரி பக்கத்தில் சில வதந்திகளுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட நெருக்கடியில் உங்களின் உணர்ச்சிகள் என்னை மூழ்கடித்துள்ளது. என் மீது இறக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதேவேளையில் நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன், சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, கருகலைப்பு செய்தேன் என்று என்னைப்பற்றி பொய்யான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து நான் மீண்டு வர வெகுநாட்கள் ஆகும். இதுஒருபுறம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.