தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிந்துவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் ஓடிடி வெர்ஷன் விரைவில் வெளியாகவுள்ளது. ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயருடன் வெளியாகும் அந்த நிகழ்ச்சி, 45 நாட்கள், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள முந்தைய சீசன்களின் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் முதலில் ஓவியா ஓகே சொன்னதாகவும், அதன்பின் உடல்நிலை சரியில்லை என தட்டிக்கழித்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அதேபோல் சிநேகன், திருமணமானதை காரணம் காட்டி போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சிநேகன் கலந்துகொள்ளவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வெளியாகியுள்ள பிக்பாஸ் அல்டிமேட் புரோமோவில் புகழ் மற்றும் தீனா நடித்துள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் குறித்த க்ளூ கிடைத்துவிட்டதாக சொல்லும் தீனா ஒரு யானையின் படத்தை காண்பிக்கிறார், புகழின் கையில் சோளப்பொரி உள்ளது. இரண்டையும் லிங்க் செய்து காட்டுப்பயலே பாடலை எழுதிய கவிஞரை பற்றி பேசும் இருவரும் சிநேகனை மறைமுகமாக குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர் சிநேகன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அடுத்த போட்டியாளர்கள் யார் என்கிற க்ளூ அடுத்த புரோமோக்களாக வெளியாகவுள்ளது.