தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். இவர் அண்மையில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம் புரியாமல் பலரும் குழம்பி போயினர். நவீன் சீரியலை விட்டு விலகுகிறாரா எனவும் பேசி வந்தனர்.
இந்நிலையில், அவர் அப்படி சொல்லியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நவீன் தனது அம்மாவுடன் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரின் போட்டோவையும் பதிவிட்டு காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதை கண்மணி சேகரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு பின்னணியில் கனா காண்கிறேன் பாடலை பதிவிட்டுள்ளார். இது ஒரு திருமண பாடலாகும். இதை வைத்து பார்க்கும் போது நவீனும், கண்மணியும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இருவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். கண்மணி சேகரின் ரசிகர்களோ ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு வருகின்றனர். எது எப்படியோ? அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி.