தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம் ஜீ தமிழின் சத்யா-2 தொடரிலும் விஷ்ணு விஜய் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஷ்ணு விஜய் சமீபத்தில் கூறிய போது, 'தொலைக்காட்சியில் வெவ்வேறு வேடங்களில் நடிப்பது பெருமையாக இருக்கிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'இது சொல்ல மறந்த கதையில், என்னுடைய கதாபாத்திரம் அர்ஜூன். இந்த தொடரில் முக்கியமானதே எனக்கும் மகளுக்குமான உறவு தான். அர்ஜூன் - அக்ஷரா உறவு என்பது தெறி படத்தை நினைவூட்டுவது போல இருக்கும். தெறி படத்தில் விஜய் மற்றும் நைனிகா பேபி போல இதில் அர்ஜூனும் அக்ஷராவும் பேசப்படுவார்கள்' என கூறியுள்ளார்.