பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம் ஜீ தமிழின் சத்யா-2 தொடரிலும் விஷ்ணு விஜய் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஷ்ணு விஜய் சமீபத்தில் கூறிய போது, 'தொலைக்காட்சியில் வெவ்வேறு வேடங்களில் நடிப்பது பெருமையாக இருக்கிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'இது சொல்ல மறந்த கதையில், என்னுடைய கதாபாத்திரம் அர்ஜூன். இந்த தொடரில் முக்கியமானதே எனக்கும் மகளுக்குமான உறவு தான். அர்ஜூன் - அக்ஷரா உறவு என்பது தெறி படத்தை நினைவூட்டுவது போல இருக்கும். தெறி படத்தில் விஜய் மற்றும் நைனிகா பேபி போல இதில் அர்ஜூனும் அக்ஷராவும் பேசப்படுவார்கள்' என கூறியுள்ளார்.