தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் ரச்சிதா ஹீரோயினாக நடித்து வந்த போது, அவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவருக்கும் விஜய் டிவி சீரியல் குழுவிற்கு இடையே சலசலப்பு ஏற்படவே, சில தினங்களில் ரச்சிதா அந்த தொடரை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் சில நாட்கள் கழித்து கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில், விதவை தாய் கதாபாத்திரத்தில் ரச்சிதா நடிக்க இருந்த தகவல் வெளியாகி கவனம் ஈர்த்தது. அப்போது பலரும் ரச்சிதாவிடம் அந்த சேனலில் நடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசிய ரச்சிதா, 'அந்த சேனலில் நடிக்காதீங்க! அந்த கதாபாத்திரத்தில் நடிச்சா பெயர் கெட்டுப்போகும்னு வாண்டட்டா வந்து பயமுறுத்தினாங்க. எங்க போனாலும் கெடுத்துவிடுறதுக்கு ஒரு கும்பல் இருக்கு' என தான் மிரட்டப்பட்ட கதையை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இது சொல்ல மறந்த கதை' தொடர் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்து பாலிமர் சேனலில் தமிழில் டப்பாகி ஒளிபரப்பான 'நெஞ்சம் பேசுதே' தொடரின் ரீமேக் ஆகும். ரச்சிதா மற்றும் விஷ்ணு விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.