கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா |
அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் தொடர்களில் ஒன்று 'அன்பே வா'. இதில் டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஷில்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் அட்டகசாமான நடிப்பை வெளிபடுத்தி வந்தவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன்.
சின்னத்திரை வில்லி நடிகைகளில் சுப்புலெட்சுமி தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில், சுப்புலெட்சுமி தற்போது திடீரென அன்பே வா தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியேறியதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அன்பே வா தொடர் கொலை, போலீஸ் விசாரணை என பரபரப்பான முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த தொடரின் முக்கிய வில்லி நடிகை விலகியிருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதேசமயம் இனி சுப்புலெட்சுமிக்கு பதிலாக ஷில்பா கதாபாத்திரத்தில் நித்யா ராஜ் என்ற நடிகை நடிக்கவுள்ளார். நித்யா ராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை', 'சூர்ய வம்சம்' மற்றும் கலர்ஸ் தமிழின் 'எங்க வீட்டு மீனாட்சி' ஆகிய ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.