தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் ரிஷி தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் 'டீலா நோ டீலா', 'கையில் ஒரு கொடி - ஆர் யூ ரெடி?', 'சூப்பர் சேலஞ்ச்' ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. சினிமாக்களில் குணசித்திர வேடங்களிலும், கெஸ்ட் அப்பிரயரன்ஸிலும் நடித்து வரும் ரிஷி, தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை ஒரே ஒரு தொடரில் மட்டுமே நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'இது ஒரு காதல் கதை' தொடரில் அனந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ரிஷி தமிழ் சின்னத்திரை நடிக்கவேயில்லை. இந்நிலையில் ரிஷி தற்போது மீண்டும் தமிழ் சீரியலுக்கு வந்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் சேதுபதி ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் ரிஷி நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷியை சின்னத்திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.