தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இனிமையான குரலின் மூலம் பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள ரக்ஷிதா தற்போது சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தவிரவும் உள்நாட்டு, வெளிநாட்டு மேடை கச்சேரிகளிலும் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். மலேசியா ஏர்போர்ட்டுக்கு ரக்ஷிதாவும் குழுவினரும் காரில் வந்து கொண்டிருந்த போது, கார் திடீரென சாலையோர டிவைடரில் பலமாக மோதியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா 'நடந்த விசயத்தை நினைத்தால் உடல் நடுங்குகிறது. உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். ஏர்பேக்குகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரக்ஷிதாவின் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.