தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகையான சமீரா ஷெரீப் தனக்கு வருகின்ற நெகட்டிவான கமெண்டுகளுக்கான இண்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மற்றும் ஜி தமிழின் றெக்கைகட்டி பறக்குது மனசு தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீப். இவர் பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இதனை தொடர்ந்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதற்கு நெகட்டிவான கமெண்டுகளை கொடுத்து வந்த நெட்டிசன்களை, சமீரா பல முறை வார்னிங் செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் கர்ப்பமான வயிறுடன் புகைப்படம் போடுவதை சிலர் குறை கூறியுள்ளார். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சமீரா, "இது என்னோட பேபி... என்னோட பம்ப் ... இஷ்டம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கண்களை மூடிக் கொள்ளுங்கள்." என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.