தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தொலைக்காட்சிகளுக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டியில் புதுப்புது சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் ஒளிபரப்பும் நிகழ்ச்சி தான் சர்வைவர். ஆக்ஷன் கிங் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் ஒருவராக விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார்.
இளைஞர்களின் புது கிரஷாக மாறியுள்ள ஐஸ்வர்யா தனக்கு சர்வைவர் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர், 'பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இன்ஸ்டாவில் சில ஸ்டண்ட் வீடியோக்களை அப்லோட் செய்திருந்தேன். என்னுடைய அந்த ஸ்டண்ட் வீடியோக்களை பார்த்த ஜீ தமிழ் நிர்வாகம் என்னை அழைத்து சர்வைவர் ஷோவில் கலந்து கொள்ள சொன்னார்கள். அதன் பின் நேரடியாக இண்டர்வியூ நடந்தது. இப்படி தான் எனக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என கூறியுள்ளார்.