பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சூப்பர் சிங்கர் 8வது சீசனின் வைல்டு கார்டு ரவுண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ள நிலையில், மக்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு போட்டியாளர்கள் பைனலுக்குள் செல்கின்றனர்.
சூப்பர் சிங்கர் 8-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதற்கிடையே கடந்த 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானசி, ஆதித்யா ஆகியோர்களுக்கு பைனலுக்குள் நுழைய இரண்டாம் வாய்ப்பாக வைல்டு கார்டு ரவுண்ட் நடத்தப்பட்டது. இவர்களில் ஒருவரை மக்களும், இன்னொருவரை நடுவர்களும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஸ்ரீதர் சேனாவும், நடுவர்கள் தேர்வாக மானசியும் தேர்வாகி பைனலுக்குள் செல்கின்றனர். திறமையானவர்களின் மொத்த குவியலாக நடக்கவிருக்கும் இறுதிச்சுற்று போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.