பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்ததாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்யப்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் அங்கே இருந்த காரணத்தினால் அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பலரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் இன்று காலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்றனர். முதலில் இது ரெய்டு என தகவல் வந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். மேலும் இவர் ஷாருக்கானின் சகோதரி சுஹானா கானும் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனன்யா பாண்டே இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதில் கலந்து கொண்ட ஆர்யன்கானுடன் இதுகுறித்து சாட்டிங் செய்து இருந்ததால் அவரையும் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.