தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அர்ஜுன் ரெட்டி, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 'நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்' என்கிற பீடா அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷாலினி பாண்டே.
அப்போது பேசிய அவர், “என்னுடைய செல்ல நாய்க்குட்டி பெயர் பிர். இதை நான் கடந்த 2021ல் ஹிமாச்சலில் இருந்து காப்பாற்றி, கொண்டுவந்து வளர்க்கிறேன். நாய்களுடன் பழகிய இந்த சில வருடங்களில் தான், நான் இன்னும் சிறந்த மனித நேயம் கொண்டவளாக மாறி இருக்கிறேன். உயர்ந்த ரக நாய்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக தெருவில் இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.




