Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி

01 செப், 2025 - 05:27 IST
எழுத்தின் அளவு:
Discussion-show-regarding-stray-dogs-Patava-Gopi-apologizes
Advertisement

தெரு நாய் தொடர்பான பிரச்னை இந்திய அளவில் எதிரொலிக்கிறது. இதை வைத்து தமிழில் தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ‛நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விவாதம் நடந்தது. நாயை ஆதரித்து பேசுபவர்கள், அதற்கு எதிரானவர்கள் என களமிறங்கி பேசினார். இந்த நிகழ்ச்சி நேற்று ஞாயிறு அன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி டிரெண்ட் ஆகி உள்ளது. வலைதளங்களில் இதைப்பற்றி நிறைய பேர் தங்களது ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாய்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் படவா கோபி மற்றும் நடிகை அம்மு ஆகியோரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் அவர்களை டிரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் படவா கோபி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛மனிதர்கள் மீதான அன்பிலும், நாய்கள் மீதான அன்பிலும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் என் வீட்டு கல்யாண வேலைக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால், நான் நினைத்தது வேறு, அங்கு நடந்தது வேறு. நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து எனக்கு தெரியாது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முடிந்தால் அந்த நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வீடியோவை போடச் சொல்லுங்கள் அப்போது நான் பேசியது புரியும். பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய படவா கோபி, ‛‛இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள், நாய் குறைக்கும்'' என கூறியிருந்தார். இதை வைத்து அவரை நிறைய பேர் டிரோல் செய்தனர். இந்தச்சூழலில் தான் அவர் வீடியோ வெளியிட்டு விளக்கத்துடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!டிசம்பரில் திரைக்கு வரும் வா ... பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ram - ottawa,கனடா
06 செப், 2025 - 07:09 Report Abuse
Ram மன்னிப்பு எங்க
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
02 செப், 2025 - 09:09 Report Abuse
angbu ganesh இந்த தெரு நாய்கள் குறிப்பாக சிறுவர்களைத்தான் குறி வைக்கிறது சிறார்கள் இதனை பார்த்து பயந்து ஓட அதுங்க தொரத்துதுங்க இதனை நான் அடிக்கடி சென்னை சைதாபேட்டைலி பார்க்கிறேன் நானே சில சிறுவர்களை துரத்தும் நாய்களை விரட்டி உள்ளேன் கண்டிப்பா இந்த தெரு நாய்களை பிடித்து அதற்கான காப்பகங்களில் அடைக்க வேண்டும்
Rate this:
Karthik - Chennai,இந்தியா
02 செப், 2025 - 08:09 Report Abuse
Karthik நாய் பிரியர்களை நல்ல மனநல மருத்துவர்களிடம் கூட்டிச்செல்ல வேண்டும் பித்து பிடித்தவர் போல் பேசுகிறார்கள் - சிறு குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று எவ்வளவோ பேர் இறந்திருக்கிறார்கள் என சொன்னபிறகும் அது அவர்கள் தப்பு என்று வாதிடுகிறார்கள் இவர்களை என்ன செய்வது?
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
04 செப், 2025 - 12:09Report Abuse
Senthooraநாய்களைவிட கட்டுப்பாடு, விதி முறை பின்பற்றாமல் எட்படும் விபத்துகளும், மரணங்கழும் பல நூறு மடங்கு அதிகம்,...
Rate this:
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
02 செப், 2025 - 07:09 Report Abuse
V RAMASWAMY நீயா நானா நிகழ்ச்சியில் இந்த விஷயம் கார சாரமாக விவாதிக்கப்பட்டது. மிருக ஆர்வலர்கள் எவருக்கும் மனிதர்களின் உயிர்களைப்பற்றி எள்ளளவும் கவலை இல்லை. அவர்களுக்கு வேண்டியது அவர்களின் செல்லப் பிராணிகளுக்கு வித விதமாக அலங்காரம் செய்து அவர்களின் வாகனங்களின் அழைத்துச்சென்று டாம்பீகத்தை வெளிப்படுத்தி மக்களின் கவனைத்தை ஈர்க்க வேண்டியது. பெருகும் நாய்கள் தொந்திரவு தீவிரமடைந்து மக்களின் உயிருக்கே உலை வைக்கும் நிலையில் இதனை ஒரு அவசரகால விஷயமாக எடுத்து அனைத்து மாநில மத்திய அரசு துறைகளும் நடவடிக்கை உடனடியாக எடுக்கவேண்டும்.
Rate this:
01 செப், 2025 - 08:09 Report Abuse
I Sathik Ali மனிதன் பூமி எல்லாம் விசம் பரப்பி விட்டுட்டன் அத நாள் மனிதன் எல்லாம் கொலை பன்னி விடாலமா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in