தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் திரை உலகில் 10 வருடங்களுக்கு முன்பு வரை தனது ரசிகர்களை மச்சான் என அழைத்து குஷிப்படுத்தும் ஒரு கவர்ச்சிகரமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. அதன்பிறகு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி தற்போது அரசியல் கட்சியிலும் இணைந்து தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தேனியில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நமீதா.
இந்த விழாவில் செய்தியாளர்களிடம் நமீதா பேசியபோது, “மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு விருப்பம் தான். அதே சமயம் 'படையப்பா' படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் போல காலம் கடந்தும் நம்மை பற்றி பேச வைக்கும் படமாக, கதாபாத்திரமாக இருக்க வேண்டும். மேலும் பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன் மற்றும் ராதிகா ஆப்தே போன்றவர்கள் அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள்.. அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு கதாபாத்திரங்களை தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.