தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெரு நாய்கள் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனாலும், விலங்கு நல ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகள் எப்போதும் விலங்குகளுக்கு ஆதரவாக பேசுவார்கள், அதற்கான பேரணி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பதால் தெரு நாய்கள் விஷயத்தில் அந்த ஆர்வலர்கள் அமைதியாகிவிட்டனர்.
சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் கூறுகையில், ‛‛நாய்க்கடி சரியானது என்று சொல்லவில்லை. அதை செய்தியாக சொல்லும் போது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் ரூ.4.5 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றை காப்பாகத்தில் அடைக்க குறைந்தபட்சம் 2500 முகாம்கள் தேவைப்படும். அதற்கு அரசு செலவு செய்யும் தொகைக்கு பதிலாக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். தெரு நாய்களை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். அதற்காக தானே ஓட்டு போட்டுள்ளோம். மனிதர்களே மனிதர்களை அடித்துக்கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல'' என தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சுக்கு வலைதளங்களில் கடும் விமர்சனங்கள். தனிப்பட்டமுறையிலும் அவரை தாக்கி பதிவிடுகின்றனர். பீட்டா அமைப்பின் ஆதரவாளர்களாக திரிஷா, வரலட்சுமி போன்றவர்கள் இன்னமும் தெரு நாய்கள் விஷயத்தில் வாய்ஸ் கொடுக்கவில்லை.
ஜல்லிக்கட்டு தடை விதிக்க வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்தவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அந்த பயத்தில் தெருநாய்கள் விஷயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் கப்சிப். அதேசமயம், நடிகை கீர்த்தி சுரேஷ் தெரு நாய்கள் விஷயத்தில் கவனம் தேவை. என் டிரைவர் கூட நாய்கடியால் பாதிக்கப்பட்டார் என்று மாற்றுகுரல் கொடுத்துள்ளார்.