கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடக்கப் போகிறது. அதுவும் 12 மாத முடிவில் அல்ல, 11 மாத முடிவில் என்பது ஆச்சரியமான ஒன்று.
அக்டோபர் முதல் வாரத்தில்தான் இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்தது. டிசம்பர் முடிவதற்குள் அது 250ஐக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டே மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ரஜினி கேங், பிபி 180, பிரைடே, ஒண்டிமுனியும் நல்லபாடனும், ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களின் வெளியீட்டுடன் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடக்கப் போகிறது.
இந்த வருடம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலும் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம். அதனால், இந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 275ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு மொழியிலும் நடக்காத ஒன்று இது.