ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் குறைந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில பிரபலங்கள் அவ்வப்போது கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துகொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தான் கடந்த மாதம் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததாக தற்போது கூறியுள்ளார்.
கடந்த மாதம் டைகர்-3 படப்பிடிப்பிற்காக ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு சென்றிருந்தபோது அங்கே கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகி, நான்கு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டேன் என்று கூறியுள்ளார் இம்ரான் ஹாஸ்மி. இந்தியாவிலிருந்து விமானம் ஏறும் முன்போ, அல்லது விமானத்தில் பயணித்த சமயத்திலோ தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி ஒரு மாதம் கழித்து அவர் இதை கூறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர் தற்போது நடித்துள்ள டைபக் என்கிற ஹாரர் படம் வரும் அக்-29ல் வெளியாக இருக்கிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இம்ரான் ஹாஸ்மி, தனக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதையும் ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி வருகிறார் என்றே பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.