இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. சாதனையார்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலை துறையில் சினிமாவில் சாதனை படைத்து வரும் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் கங்கனா சினிமாவில் இதுவரை 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி-யில் சிறப்பாக நடித்திருந்தார்.