2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , சம்மன் அனுப்பியது.
தனது துணிச்சலான கருத்துக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறார் நடிகை கங்கனா ரணவத், அதே அளவிற்கு அவருக்கு எதிர்ப்புகளும் உருவாகி வருகிறது. அவரது கருத்துக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்தாக பார்க்கப்படுவதால் எதிர்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கங்கனா ரணவத் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டதாக அவர் மீது டில்லி குருத்வாரா கமிட்டி போலீசில் புகார் அளித்தள்ளது. போலீசாரும் கங்கனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் டில்லியின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சட்டசபையில் நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்கு சட்டசபையின் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.