பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலாவும், சல்மான்கானும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப்படத்தை பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கவுள்ளார். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இதில் இன்னொரு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பதுதான்.
வெங்கடேஷுக்கு பாலிவுட் ஒன்றும் புதிதல்ல. தொண்ணூறுகளில் சின்னத்தம்பியின் இந்தி ரீமேக்கில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார் வெங்கடேஷ். அதன்பிறகு 1995ல் டக்தீர்வாலா என்கிற படத்தில் நடித்தவர், அந்த இரண்டு படங்களுடன் பாலிவுட்டில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். இந்தநிலையில் தான் 26 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியில் நுழையா இருக்கிறார் வெங்கடேஷ்.
மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் இந்தப்படத்தை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா. அந்தவகையில் சல்மான்கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் வெங்கடேஷுக்கு ஜோடியாகவும் பிரபல தென்னிந்திய நடிகை ஒருவரையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.




