பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அரசியல் புரோக்கராகவும், மோசடி மன்னனாகவும் கருதப்படுகிறவர் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். அவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. கைது செய்து சிறையில் அடைத்த பிறகும், ஜெயலில் இருந்து கொண்டே 200 கோடி மோசடி செய்தார். அவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்டாண்டசுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு சமீபத்தில் வெளியானது அவரும் இந்த மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி மும்பையில் இருந்து மஸ்கட் தப்பி செல்ல முயன்ற நடிகை ஜாக்குலினை, மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. அதன்படி, விசாரணைக்காக டில்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் நேற்று ஆஜரானார். சிறையில் இருந்து கொண்டே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்ததாக புகார் தொடர்பாகவும், இந்த மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்தும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்னும் சில நாட்களில் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.




