அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
கொரோனாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் நடிகர், நடிகைகள் விழாக்கள், விருந்துகள், படப்பிடிப்புகள் என எப்போதும் ஒரு கூட்டத்துடனேயே இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை கொரோனா தொற்று எளிதாக தாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கிறது. இதையும் சிலர் மீறிவிடுகிறார்கள்.
அலியா பட் நடித்து வரும் இந்தி படம் பிரம்மாஸ்த்ரா. டில்லியில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டார். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார். இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து நடிகை ஆலியா பட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. தனிமைப்படுத்துதல் விதியை மீறி அவர் மும்பையிலிருந்து டில்லி சென்றதாகவும், அவர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்துள்ள மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆலியா பட் தனிமைப்படுத்தப்படவில்லை, அவர் கொரோனா விதியை மீறவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விமானத்தில் செல்வதற்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.