வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு டிசம்பர் 27-ந்தேதியான நாளை 56வது பிறந்த நாள் ஆகும். தனது ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளின்போதும் தனது பன்வெல் பண்ணை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடும் சல்மான்கான் அங்குதான் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து வந்தார். அதேபோல் கடந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் இந்த பண்ணை வீட்டில்தான் அதிகப்படியான நாட்களை கழித்து வந்த சல்மான்கான், அங்கிருந்தபடியே போட்டோஷீட் நடத்தியும் வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் நாளை அவரது பிறந்த நாள் என்பதால் அவரது பன்வெல் பண்ணை வீடு சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தபோது சல்மான்கானின் கையில் ஒரு பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் அவருக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதை யடுத்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதனால் நாளை நடைபெறும் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சல்மான்கான் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.