துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ஹர்ஷாலி மல்கோத்ரா. தற்போது பெரிய பெண்ணாகி நாஷ்டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு மகாராஷ்டிர கவர்னர் ஸ்ரீ பகத் சிங் கோஷ்யாரி அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறார். மும்பை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பஜ்ரங்கி பைஜான்' படத்திற்குப் பிறகு பல படங்கள் வந்தது. ஆனால் அது எதுவும் நான் நடிப்பதற்கு ஏற்ற மாதிரி அமையவில்லை. மேலும் படிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. இப்போது. எனது படிப்பையும் நடிப்பையும் ஒன்றாக நிர்வகிக்கும் திறன் எனக்கு வந்துவிட்டது. அதனால் படிப்பின் காரணமாக எந்த ஒரு நல்ல வேடத்தையும் இனி நிராகரிக்க மாட்டேன். என்கிறார்.