பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
இந்திய அளவில் பாலிவுட்டில் எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள்தான் வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைக்கும். ஆனால், இந்த 2022ம் வருடத்தில் இரண்டு தென்னிந்தியப் படங்கள் தான் வசூல் சாதனை படைத்துள்ளது. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே மிகப் பெரும் வசூலைக் குவித்தது.
இது குறித்து ஏற்கெனவே ராம்கோபால் வர்மா சில பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் கிண்டலான ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். “தெலுங்கு, கன்னடப் படங்கள் ஹிந்திப் படங்களை கோவிட் வைரஸ் போல நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிட்டன. பாலிவுட் விரைவில் தடுப்பூசியுடன் வரும் என எதிர்பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜெர்சி' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் 'காஷ்மீர் பைல்ஸ்' தவிர வேறு எந்தப் படமும் வசூலைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.