பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆலியா பட். அவர் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகத்தான் நடித்தார் என்றாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இல்லாமல் இருந்தது. மேலும், ஒரு துணை நடிகைக்குரிய கதாபாத்திரத்தையே உருவாக்கி இருந்தார் ராஜமவுலி. இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த ஆலியா பட், 'ஆர்ஆர்ஆர்' படம் சம்பந்தப்பட்ட சில படங்களை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். பின்னர் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு ஆலியா பட் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என ஆலியா சொல்லிவிட்டாராம். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. எனவே, இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஆலியா.